Amma JJ Interview -Flasback

“அப்பாவி பெண்ணாக இருந்த என்னை சுற்றியிருந்தவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்”: ஜெயலலிதாவின் மனம் திறந்த பேட்டி
தமிழக அரசியலின் நெருங்க முடியா பெண்மணியாக பார்க்கப்படும், ஜெயலலிதாவின், மிகப்பிரபலமான பேட்டி இது. செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெ. எப்படி பேசுவார் என்பது கூட இன்றைய தலைமுறைக்கு தெரியாத சூழலில், அவரின் மிக இலகுவான பக்கத்தை காட்டும்வகையிலான ஒரே ஒரு வீடியோ பேட்டி என்றால், அது இதுவாக மட்டுமே இருக்கும்.
Rendezvous with Simi Garewal (ரான்டேவூ வித் சிமி கரேவல்) என்ற இந்த நிகழ்ச்சியில், வெட்கப்படும், புன்னகைக்கும், உணர்ச்சிவசப்படும், பாட்டு பாடும், தன் இளைமைக்கால crush பற்றி கூறும் ஜெயலலிதாவை பார்க்க நேரிடுகிறது.
இந்த பேட்டி மிக பிரபலமான ஒன்றுதான் என்றாலும், ஆங்கிலத்தில் இருப்பதால், பேட்டியின் தமிழ் வடிவிலான கட்டுரையை தர முயன்று இருக்கிறோம். பேட்டியின் தமிழாக்கம் கீழே.
சிமி: உங்கள் அரசியல் வாழ்க்கையை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். மிக துணிச்சலான பயணம். ஆனால் எந்த சினிமா திரைக்கதையை விடவும் அதிக திருப்பங்கள் கொண்டது இல்லையா அது?
ஜெ: அதிக போராட்டங்கள் நிறைந்ததும் கூட. (Its a tempestuous life என்கிறார் ஜெ. 
இந்த பேட்டி முழுவதுமே, கேட்கப்படும் கேள்விகளுக்கு, மிகத் துல்லியமான, அதிகம் பயன்படுத்தப்படாத ஆங்கில வார்த்தைகளை தேர்வு செய்து பதில் அளிக்கிறார் ஜெ)
சிமி: வெற்றி, தோல்வி, வழக்கு என்று எதிர்பார்த்திருக்காத வகையிலான ஏற்ற இறக்கங்களைக் கொண்டது உங்கள் வாழ்க்கை. எப்போதாவது எரிச்சல்பட்டிருக்கிறீர்களா ? பயம் அல்லது, ஆத்திரமடைந்திருக்கிறீர்களா ? அதை வெளிக்காட்டி இருக்கிறீர்களா ?

ஜெ: கண்டிப்பாக. நானும் எல்லோரையும் போலதானே. இதுபோன்ற உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை என்றால்தான் நான் இயல்பாக இல்லை என்று அர்த்தம். ஆனால் நீங்கள் ஒரு தலைவராக இருக்கும்போது உங்களுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த கற்றுகொள்வீர்கள். வெளிப்படுத்த மாட்டீர்கள்.
சிமி: எப்போது பார்த்தாலும், எந்த நாளில் உங்களை பார்த்தாலும், மிக சாந்தமாக, அமைதியாக இருக்கிறீர்கள். இதற்குப் பின்னால் ஒளிந்திருப்பது என்ன ? என்று நான் தெரிந்து கொள்ளலாமா ?

ஜெ: (வெடித்து சிரிக்கிறார் ஜெ.பின் சிறு இடைவெளி விட்டு பதிலளிக்கிறார்) என்னுடைய உணர்வுகளை எனக்குள்ளேயே வைத்துக்கொள்கிறேன். அதை யாருக்கும் வெளிப்படுத்துவதில்லை. பொது இடங்களில் நிதானம் இழப்பதில்லை. அழுததில்லை. என்னுடைய உணர்வுகள் என்பது காட்சி படுத்துவதற்கல்ல என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
சிமி: இது எப்படி சாத்தியமாகிற்று ?

ஜெ: எனக்கு மனஉறுதி அதிகம். சுயகட்டுப்பாடும்.
சிமி: அரசியல் உங்களை வலிமை வாய்ந்தவராக மாற்றி இருக்கிறதா ?

ஜெ: கண்டிப்பாக. இப்போது நீங்கள் பார்க்கும் இந்தப்பெண் இல்லை நான். எப்போதும் இப்படியான பெண்ணாக இருந்ததில்லை. அதிக கூச்சமுடைய, அன்னியர்களை சந்திக்க விரும்பாத, அதுவுமில்லாமல், மற்றவர்களால் கவனிக்கப்படுவதை அறவே வெறுத்த பெண் நான்.
சிமி: நிஜமாகவா ? ஆச்சர்யமாக இருக்கிறது.

ஜெ: ஆச்சர்யம்தான். நிஜமாகவே மற்றவர்களின் கவனத்துக்கு ஆளாவதை வெறுத்திருக்கிறேன். ஆனால், நாட்டின் உயரிய இரண்டு பொறுப்புகளை வகித்தது விதியின் வழி. நிஜத்தில் பொறுப்புகளுக்கு பின்னாலிருந்து பணிபுரியவே நான் விரும்பி இருக்கிறேன்.
சிமி: பின்னோக்கி பார்த்தோமானால், உங்களுடைய தற்போதைய வாழ்க்கைக்கும், உங்கள் சிறுபிராயத்திற்கும் ஏதாவது தொடர்பிருக்கிறது என்று நினைக்கிறீர்களா ?

ஜெ: கண்டிப்பாக இல்லை. தமிழ் ஐயங்கார் குடும்பத்தில் பிறந்த நான், மிக பாரம்பரியமான, ஆச்சாரமான முறையில் எனது தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்ட பெண்.
சிமி: நீங்கள் உங்கள் ஆறு வயதில் இருந்து பத்து வயது வரை பெங்களூரில் தாத்தா பாட்டியிடம் வளர்ந்தீர்கள் இல்லையா ? உங்கள் அம்மாவை பிரிந்திருந்தது கஷ்டமாக இருந்ததா?

ஜெ: மிக கஷ்டமாக இருந்தது. மிகவும் சகித்துக்கொள்ள முடியாததாக இருந்தது.
சிமி: உங்களைப் பார்ப்பதற்கு அடிக்கடி பெங்களூருக்கு வருவார்களா? ??

ஜெ: அவர்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வருவார்கள். ஆனால், அடிக்கடி என்று சொல்ல முடியாது. எனக்கு ஐந்து வயதிருக்கும். அப்போது பெங்களூரு வரும் என்னுடைய அம்மா , சென்னை திரும்ப நேர்கையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக, நான் தொடர்ந்து அழுவேன். இதன் காரணமாக, என்னை தூங்க வைத்துவிட்டுத்தான், அம்மா சென்னைக்கு கிளம்புவார்கள். ஆனால், அம்மா சென்னைக்குக் கிளம்பிவிடக்கூடாது என்பதற்காக , தூங்கும்போது, அவரது சேலைத் தலைப்பை என்னுடைய கைகளில் சுருட்டி வைத்துகொண்டுதான் தூங்குவேன். காலையில் எழுந்திருக்கும்போது, வேறு வழியில்லாமல், என் கையிலுள்ள சேலை தலைப்பை மெதுவாக உருவி எடுத்துவிட்டு, சித்தியின் சேலை தலைப்பை என் கைகளில் சுருட்டிவிட்டு, அம்மா கிளம்புவார்களாம் காலையில் எழுந்து அம்மாவைக் காணாது, அழுது, அழுது, ஒரு மூன்று நாட்களுக்காவது சமாதானப்படுத்த முடியாத அளவுக்கு அழுதிருக்கிறேன். பெங்களூரில் இருந்த நாட்களில் எல்லாம் என் அம்மாவுக்காக ஒவ்வொரு நிமிடமும் ஏங்கி இருக்கிறேன்.
சிமி: ஜெயாஜி, சிறுபிராயம் என்பது நம்முடைய வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடாது என்பது உங்கள் கருத்தாக இருந்தாலும், உணர்வுப்பூர்வமாக அது ஒரு அழுத்தத்தை, வாழ்க்கையில் ஏற்படுத்தவே செய்கிறது இல்லையா ?

ஜெ: இருக்கலாம். என் வாழ்க்கையை திரும்பி பார்த்தால், வாழ்க்கையில் மிகக் குறைவான காலங்களையே அம்மாவுடன் கழித்திருக்கிறேன். யோசித்தால், நான் எதிர்பார்த்த முழுமையான அன்பை என் அம்மாவிடமிருந்து நான் அனுபவிக்கவே இல்லை. நேரம் இல்லை என்பதுதான் நிதர்சனம். அம்மாவுடன் வசிப்பதற்காக பெங்களூரில் இருந்து சென்னை வந்தபோது, அவர் சினிமாத்துறையில் மிகவும் பரபரப்பாக இருந்தார். நான் எழுவதற்கு முன்னரே அவர் படப்பிடிப்பிற்கு சென்றிருப்பார். பள்ளிக் காலத்தில், ஆங்கில கட்டுரைப்போட்டியில் நான் பெற்ற முதல் பரிசை அம்மாவிடம் காண்பிப்பதற்கே நான் நள்ளிரவு வரை காத்திருந்திருக்கிறேன். மறக்க முடியாத, பொக்கிஷமான நினைவு அது.
சிமி: நீங்கள் கான்வென்ட்டில் படித்தீர்கள் அல்லவா ? பள்ளி மாணவிக்குரிய இயல்பான கனவுகளோ, ஈர்ப்புகளோ இருந்ததா உங்களுக்கு ?

ஜெ: இல்லாமல் எப்படி ?கிரிக்கட் வீரர் நாரி காண்டிராக்டர் மீது எனக்கு பெரும் ஈர்ப்பு இருந்தது. அவரைப் பார்ப்பதற்காக மட்டுமே சென்னையில் டெஸ்ட் கிரிக்கெட் நடைபெறும் மைதானங்களுக்கு செல்வேன்.ஹிந்தி நடிகர் ஷம்மி கபூர் மீதும் கூட எனக்கு ஈர்ப்பு இருந்தது. அவர் நடித்த “ஜங்லி” திரைப்படம் , தற்போது வரை எனக்கு மிக பிடித்த படம்.”இதற்கடுத்த சில நொடிகளில், “ஆஜா சனம்” என்ற பிரபல ஹிந்திப்பாடலை ஜெ. பாடுகிறார். சிறு வெட்கத்துடன் )
சிமி: உங்களுடைய அம்மா ஒரு நடிகை என்பதற்காக, பள்ளியில் உங்களுடன் படித்த மாணவிகள், உங்களை கேலி செய்திருக்கிறார்களா ? அது உண்மையா ?

ஜெ: உண்மைதான். மேல்தட்டு குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் சிலர், பரிகாசம் செய்வார்கள். முன்னணி நடிகையாக, என் அம்மா இல்லாததால்தான் அவர்கள் என்னை கிண்டலடித்தார்கள். அம்மா அப்போது குணச்சித்திர காதாபாத்திரத்தில்தானே நடித்தார். ஒருவேளை அவர் முன்னணி கதாநாயகியாக இருந்தால், அவர்கள் என்னைப் பார்த்து பொறாமைப்பட்டிருப்பார்கள்.அதை எல்லாம் சரிக்கட்டும்விதமாக, அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெறும் மாணவியாக இருந்தேன். நான் பள்ளியை விட்டு செல்லும்போது, அனைத்து ஆசிரியர்களும் எனக்கு ஒருமனதாக “Best outgoing student of the year” பட்டம் அளித்தார்கள். என் வாழ்வில் நான் மிகப்பெருமையாக உணர்வதும், இதுவரை பெருமைப்படுவதும் அதற்காகத்தான்.

ஆனால் அப்போதெல்லாம், இந்த பரிகாசங்களை கேட்டு, உடைந்து போய் அழுதது உண்டு. ஆனால் இப்போது அப்படி இல்லை. என்னை பரிகசிப்பவர்களுக்கு திருப்பி கொடுக்க கற்றிருக்கிறேன். சில நேரங்களில், அவர்கள் பரிகசித்ததற்கு அதிகமாகவே திருப்பி அடிக்கிறேன்.
சிமி: 120 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறீர்கள் இல்லையா ? உங்களுடைய சினிமா வாழ்க்கை எப்படி இருந்தது ?

ஜெ: well. என்னுடைய காலத்தில் நான் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகையாக இருந்திருக்கிறேன். எனக்கு அந்த துறை பிடிக்கவில்லை என்றாலும், ஏற்றுக்கொண்ட பொறுப்பில் மிகச்சிறந்து விளங்குவதற்கான அத்தனை முயற்சிகளையும் எடுத்திருக்கிறேன். நம்பர் ஒன் நடிகையாகவும் இருந்தேன். அதேபோல், அரசியல் எனக்கு பிடிக்காவிட்டாலும் நான் ஒரு வெற்றிகரமான அரசியல் தலைவர் என்று மக்கள் கூறுகிறார்கள். என்னை பார்த்து நானே ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
சிமி: நடனம் ஆடுவது, ஒப்பனை செய்வது, ஒத்திகை பார்ப்பது, இப்படியான சினிமாத்துறை பணிகள் உங்களுக்கு பிடித்திருந்ததா ?

ஜெ: பிடித்தது என்று சொல்ல மாட்டேன். ஆனால் நடிப்பு எனக்கு இயற்கையாவே வந்தது. நான் ஒரு பிறவி நடிகர் என்றுதான் சொல்லவேண்டும். யாரையும் பிரதி எடுத்து நடிக்க நான் முயன்றதே இல்லை.
சிமி: உங்களுடைய 23 வயதில், நீங்கள் அம்மாவை இழந்துவிட்டீர்கள். அந்த சூழலை எப்படி எதிர்கொண்டீர்கள்.

ஜெ: கண்ணைக் கட்டி காட்டுக்குள் விடப்பட்ட ஒரு சிறு குழந்தையைப் போல, திணறிப்போனேன். அதை அப்படித்தான் சொல்லவேண்டும். அம்மாதான் என்னுடைய முழு உலகமும். அவர் என்னைப் பாதுகாத்தாரே தவிர, வேறு எதையும் எனக்கு சொல்லித்தரவில்லை.எனக்கு குடும்பத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை. வங்கிக்கணக்கு பற்றியோ, காசோலையில் கையெழுத்து போடுவது பற்றியோ, வருமான வரி கட்டுவது பற்றியோ, ஏன் ? என் வீட்டில் எத்தனை பணியாளர்கள் இருக்கிறார்கள் என்பது பற்றியோ, இப்படி எனக்கு எதுவுமே தெரியவில்லை. நான் என்ன சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன் என்று கூட எனக்குத் தெரியவில்லை. மிகுந்த அப்பாவியான குழந்தை ஒன்றை கண்ணை கட்டி காட்டுக்குள் விட்டுவிட்டதை போலதான் உணர்ந்தேன். கையறு நிலையிலான அன்றைய சூழலலில், வெகுளியான, எளிதில் காயப்படக்கூடிய, அப்பாவி பெண்ணாக இருந்த என்னை, சுற்றி இருந்த அத்தனை பேருமே பயன்படுத்திக்கொண்டார்கள்.
சிமி: எம்.ஜி.ஆரை காதலித்தீர்களா ? அவர் மீது காதல் இருந்ததா ?

ஜெ: ( அகன்ற புன்னகை ஒன்றுக்குப் பின்) அவரை சந்தித்த அனைவருமே அவரை காதலித்திருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். கவர்ந்திழுக்கும் ஆளுமை அல்லவா அவர்.
சிமி: தனிப்பட்ட மனிதராக எம்.ஜி.ஆர் எப்படிப்பட்டவர் ? அவர் ஒரு புதிரைப் போன்றவர் இல்லையா ?

ஜெ: மிகுந்த அக்கறையும், இரக்கமும் உள்ள மனிதர் அவர். எனது அம்மாவுக்குப் பின், என் வாழ்க்கையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியவர் அவர்தான். அவர் எனக்கு எல்லாமுமாக இருந்தார். அப்பா, அம்மா, நண்பன், வழிகாட்டி, என்று எல்லாமுமாக.
சிமி: எம்.ஜி.ஆர் உங்கள் வாழ்க்கையின் மீது ஆதிக்கம் செலுத்தினாரா ?

ஜெ: கண்டிப்பாக. அம்மாவும் , அவரும் என்னுடய வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தினார்கள்தான். பிடிவாதமான ஆளுமைகள் அவர்கள் இருவருமே. அம்மா என் மீதும், எம்ஜிஆர் என் வாழ்க்கையின் மீதும் ஆதிக்கம் செலுத்தினார்கள். இருப்பினும், அவர்கள் இருவரும்தான் என் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்.
சிமி: உங்கள் மீது எம்.ஜி.ஆர் possessive ஆக இருந்தாரா ?

ஜெ: (அதே அகன்ற புன்னகை) இருந்திருக்கலாம்.
சிமி: ஜெயாஜி. நிபந்தனையற்ற அன்பை கண்டிருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் ?

ஜெ: இல்லை. கண்டிப்பாக இல்லை. நிபந்தனையற்ற அன்பு என்ற ஒன்று இருப்பதாகவே நான் கருதவில்லை.

புத்தகங்கள், நாவல்கள், கவிதைகள், திரைப்படங்களில்தான் அது, அந்த நிபந்தனையற்ற அன்பு இருக்கிறது. உண்மையில், அப்படி ஒன்று இருக்குமானால், அந்த நிபந்தனையற்ற அன்பை நான் இதுவரை சந்தித்திருக்கவில்லை.
சிமி: எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகுதான், அரசியலில், உங்களுக்கு எதிரான பெரும் போராட்டங்களை நீங்கள் சந்தித்ததும், வெற்றி கண்டதும். இல்லையா ?

ஜெ: மிகச்சரி. அவர் இருக்கும்வரை, அவர்தான் கட்சித்தலைவர். அவருடைய அறிவுரையை பின்பற்றுவதுதான் என்னுடைய வேலை. ஆனால் அவருக்குப் பின், நான் தனித்து விடப்பட்டேன். அவருடைய வாரிசாக வருவதற்கான எந்தப் பாதையையும் எம்ஜி.ஆர் எனக்கு உருவாக்கித் தரவில்லை.

அரசியலுக்கு அவர்தான் என்னை அழைத்து வந்தார் என்றாலும், அந்த பாதையை அவர் எனக்கு எளிதாக்கித் தரவில்லை. ராஜீவ் காந்திக்கு அவருடைய தாயார் இந்திரா காந்தி செய்ததை போல, கட்சி தலைமையை பொறுப்பை வகிக்கும் அளவிற்கு ராஜீவை, தயாராக்கியத்தை போல, என்னை யாரும் தலைமை பொறுப்பிற்கு உருவாக்கவில்லை.

தெற்கு ஆசியாவை எடுத்துகொண்டால் நாட்டின் தலைமை பதவிக்கு வந்த பெண்கள் அனைவருமே, யாரோ ஒரு தலைவரின் மகளாகவோ, அல்லது மனைவியாகவோதான் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த வாய்ப்பு தங்கத் தட்டில் வைத்து வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் எனக்கு அப்படி இல்லை.மறைந்த தலைவரின் மனைவியாக இருந்தால், உங்கள் மீது இயல்பாகவே மரியாதை வந்துவிடும். மக்கள் உங்களை மரியாதையோடு விளிப்பார்கள். அணுகுவார்கள். ஆனால் எனக்கு அப்படி இல்லை. அரசியலுக்கு அவர்தான் என்னை அழைத்து வந்தார் என்றாலும், அந்த பாதையை அவர் எனக்கு எளிதாக்கித் தரவில்லை. என்னுடைய ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க நான் மிகவும் போராட வேண்டி இருந்தது. 
சிமி: ஆண்கள் உங்களை பார்த்து பயப்படுகிறார்களா ?

ஜெ:அவர்களைத்தான் நீங்கள் கேட்க வேண்டும். நான் அப்படிதான் நினைக்கிறேன். ஆனால், இப்போதெல்லாம் என்னை பார்த்தாலே ஆண்கள் பீதியாகுகிறார்கள் (சொல்லிகொண்டே சிரிக்கிறார்)
சிமி: ஏன் ?

ஜெ: ஊடகங்கள் அப்படியான ஒரு இமேஜை, என்னை பற்றி கட்டமைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, மற்றவர்களின் அபத்தங்களை முட்டாள்தனங்களை இப்போதெல்லாம் நான் பொறுத்துக்கொள்வதில்லை.அந்த பழைய, ஜெயலலிதா இப்போது இல்லை. அதிர்ந்து பேசாத, எப்படி எதிர்த்து பேசுவது என்று தெரியாத, அவமானப்படுத்தினால், வீட்டுக்கு சென்று அறையை பூட்டிக்கொண்டு அழுகிற அந்த பழைய ஜெயலலிதா இல்லை நான் இப்போது. என்னுடைய இந்த மாற்றம் எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது.
சிமி: ஆண்களை வெறுப்பவரா நீங்கள் ? are you a Man Hater ? ஆண்கள்தான் உங்களின் மோசமான விமர்சகர்கள் இல்லையா ?

ஜெ: இல்லையே. ஆண்களை வெறுப்பவள் இல்லை நான். இன்னும் சொல்லப்போனால், பெண்கள்தான் என்னை மிக மோசமாக விமர்சித்திருக்கிறார்கள்
சிமி: சசிகலாவுடானன உங்கள் சிநேகம் இத்தனை விமர்சனங்களை சந்தித்த பின்னும், நீங்கள் அதை தொடருவது ஏன் ? சசிகலாவை விட்டுக்கொடுக்காமல் இருப்பது ஏன் ?

ஜெ: என் மீதான அவருடைய விசுவாசத்தின் காரணமாகவே, மற்றவர்களால் மிகத்தவறாக சித்தரிக்கப்பட்ட புரிந்துகொள்ளப்பட்ட ஒரு பெண் அவர். எனக்காக அவர் மிக சிரமப்பட்டிருக்கிறார். உங்களுக்கு தெரியுமா ? அவர் ஒரு வருடம் சிறை அனுபவித்திருக்கிறார். என்னுடனான நட்பு மட்டும் இல்லையென்றால், அவரை யாருமே இந்தளவு தொந்தரவு செய்திருக்க மாட்டார்கள். பரபரப்பான அரசியல் வாழ்க்கையை மேற்கொள்ளும் ஒருவரால் அவருடைய குடும்பத்தையும் கவனித்து கொள்வது என்பது இயலாத காரியம். பெரும்பாலான ஆண்களுக்கு இது புரிவதில்லை. ஏனென்றால், அவர்களுக்கு வீட்டில் மனைவியோ அல்லது வேறு யாரோ இருப்பார்கள். ஆண்கள்தான் எங்களுடைய நட்பை கொச்சைப்படுத்துகிறார்கள். எனக்கான ஷாப்பிங்கை கூட நான் செய்ய முடியாது. எனக்கான பொருட்களை யாராவது எனக்கு வாங்கி வர வேண்டும். என்னுடைய குடும்பத்தை எனக்காக யாராவது நிர்வகிக்க வேண்டும். அதைத்தான் அவர் செய்கிறார். என்னுடன் பிறக்காத சகோதரி அவர் என் அம்மாவின் இடத்தை, நிரப்பிய பெண் அவர்.
சிமி: நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை ஜெயாஜி ?

ஜெ: அப்படி ஒன்று நடக்கவில்லை
சிமி: திருமணம் செய்து கொள்ளுமளவிற்கு யாரையாவது சந்தித்திருகிறீர்களா ? இவரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எப்போதாவது தோன்றி இருக்கிறதா ?

ஜெ: இல்லை. அப்படி யாரையும் சந்திக்கவில்லை. ஆனால், திருமணம் என்கிற அந்த எண்ணம் எனக்கும் இருந்தது. எல்லா இளம் பெண்களையும் போல, நானும் எனக்கான Prince Charming பற்றி கனவு கண்டிருக்கிறேன். என்னுடைய பதினெட்டு வயதில் , என்னுடைய அம்மா எனக்கு திருமணம் செய்து வைத்திருந்தால், அது பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, நான் மகிழ்ச்சியாக ஒரு வாழ்க்கையை தொடங்கியிருப்பேன். குடும்பம், குழந்தைகள் என்று அந்த வாழ்க்கையை தொடர்ந்திருப்பேன் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கவே மாட்டேன்.ஆனால், எதிர்பார்ப்பதெல்லாம் நடப்பதில்லையே.
சிமி: ஒரு முழுமையான குடும்பம் உங்களுக்கு இல்லை என்று தோன்றுகிறதா இப்போது ?

ஜெ: இல்லை.எப்போதும் இல்லை. என்னுடைய சுதந்திரத்தை நான் முழுமையாக அனுபவிக்கிறேன். தோல்வியுறும் திருமணங்கள், பெற்றோர்களை கைவிடும் குழந்தைகள் என்று என்னை சுற்றி நடப்பவை எல்லாம் பார்க்கும்போது, எனக்கு திருமணமாகதது குறித்து வருத்தமில்லை. சந்தோஷப்படவே செய்கிறேன். இந்த வாழ்க்கை எனக்குப் பிடித்திருக்கிறது. என்னுடைய முடிவுகளை நானே எடுக்கும் சுதந்திரத்தை. யாருக்கும் விளக்கம் கொடுக்க வேண்டி இருக்காத, மற்றவர்களை மகிழ்விப்பதற்காக வாழத் தேவையில்லாத இந்த சுதந்திரத்தை நான் விரும்பவே செய்கிறேன்
சிமி: இப்படியான ஒரு மாலை சந்திப்புக்காக மிக்க நன்றி ஜெயாஜி. மிக நேர்மையாக, மிக உண்மையாக உங்கள் மனதை வெளிப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சியும் ஜெயாஜி.

ஜெ: எனக்கும் மிக மகிழ்ச்சியான ஒரு பேட்டி இது. இதுMaru வரை என்னிடம் யாருக்கும் கேட்கத் தைரியம்லாத கேள்விகளை கேட்டதோடு அதற்கான பதில்களை வெளிக்கொண்டு வந்ததும் மிக அருமை. உங்களை சந்தித்ததில் மிக . நன்றி.

Taxes Details..

வரி பற்றிய முக்கிய குறிப்புகள்:::
1. விற்பனை வரியை அறிமுகபடுத்தியது ராஜாஜி
2. ஒரு பொருளுக்கு இருமுறை வரிகட்டும் சூழலை தவிர்க்கவே மதிப்பு கூட்டு வரி அறிமுகமானது
3. மதிப்பு கூட்டு வரியை முதலில் அறிமுகபடுத்திய நாடு- பிரான்ஸ்
4. இந்தியாவில் VAT முதன்முதலாக அறிமுகபடுத்திய மாநிலம் – ஹரியானா
5. தமிழ்நாட்டில் VAT 2007 முதல் அறிமுகபடுத்தப்பட்டது.
6. விவசாய வருமானத்துக்கு வரி விதிப்பு குறித்து ஆராய 1972- ல் கே.என்.ராஜ் கமிட்டி அமைக்கப்பட்டது.
7. மறைமுக வரிவிதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி- ஜா கமிட்டி(1997)

ரெக்கி கமிட்டி (1991)
8.நேர்முக வரிவிதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி- வாஞ்சு கமிட்டி(1971)
9. வரிசீர்த்திருத்தம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி- ராஜா செல்லையா கமிட்டி (1991)
10. டோபின் வரி என்பது சர்வதேச பண பரிமாற்றத்தின் மீதான வரி.
11. GST எனப்படும் Goods service tax -ஐ விரைவில் அமுல்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 1 ,2016 ல் அறிமுகபடுத்துகிறது.
12. CENVAT மத்திய அரசு விதிக்கும் கலால் வரிக்கான மாற்று வடிவமாகும்
13. VAT, GST -ஐ உருவாக்கியவர் அசிம்தாஸ் குப்தா.

Joke.. fast reaching Wife

பொண்டாட்டிக்கு இறுதிக்காரியம்பண்ணிட்டு ஒருத்தர்வீடு திரும்பிட்டு இருந்தார்.அப்போ திடீர்னு வானத்துலஇடி இடிசுதாம், மின்னல் வெட்டிச்சாம்.உடனே நம்ம ஆளு மேலபாத்து சொன்னானாம்”அதுக்குள்ளே அங்க ரீச் ஆயிட்டியா நீ”😆😆😀😂

Computer வைரஸ்கள் – ஏன், எதற்கு & எப்படி?

கணணி வைரஸ்கள் – ஏன், எதற்கு & எப்படி?
♈✝♏கணணி வைரஸ் – இந்த சொல்லை நீங்கள் கட்டாயம் கேட்டிருப்பீர்கள், இப்போது தான் கணணியை பாவிக்க தொடங்குபவராக இருந்தாலும், கணணியை நீண்ட நாட்களாக பாவித்தவராக இருந்தாலும், நிச்சயம் வைரஸ்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். கணணி வைரஸ்கள் பற்றி பலர் உங்களுக்கு இலவச ஆலோசனைகளும் சொல்லியிருக்கலாம், அது உங்களுக்கு வைரஸ்களைப் பற்றி எந்தளவுக்கு தெளிவை ஏற்படுத்தியது என்பது உங்களுக்கே வெளிச்சம். வைரஸ்கள் பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்துவதே இந்த நுலும் நுட்பமும் பதிவின் நோக்கம்.
♈✝♏இந்த பதிவில் நாம் கணணி வைரஸ்கள் என்றால் என்ன, மற்றும் அவற்றின் வகைகள், ஆண்டி-வைரஸ்கள் என்றால் என்ன அவை எப்படி வைரஸ்களில் இருந்து உங்கள் கணணிகளை பாதுகாக்கின்றன என்று பார்க்கலாம்.
*கணணி வைரஸ்கள் – என்ன?*
♈✝♏வைரஸ் என்ற சொல்லைக் கேட்டவுடன் நாம் உயிரியல் வைரஸ்களைப் போல இந்த கணணி வைரஸ்களை எண்ணிவிடக்கூடாது. கணணி வைரஸ்கள் ஒன்றும் இயற்கானவை அல்ல. இதை சொல்லவதற்கு காரணம் இதை தெரியாதவர்களும் இருக்கலாம் என்பதால் தான். சரி அப்படியென்றால் இந்த கணணி வைரஸ்கள் என்றால் என்ன?
♈✝♏கணணி வைரஸ்கள் என்பன நீங்கள் உங்கள் கணனியில் பயன்படுத்தும் வோர்ட், எக்ஸ்செல், கூகிள் குரோம் போன்ற சாப்ட்வேர்களைப் போல ஒரு சாப்ட்வேர் தான். அதுவும் ஒரு ப்ரோக்ராம் என்பதைத்தான் இப்படி சொன்னேன்.
♈✝♏ஆக கணணி வைரஸ்கள் என்பன, சாதாரணமாக இயங்கிக்கொண்டிருக்கும் கணனியின் செயல்பாடுகளில் இடையூறு விளைவித்து கணனியின் செயற்பாட்டையோ முழுமையாகவோ பகுதியாகவோ பாதிக்கக்கூடிய கணணி ப்ரோக்ராம் ஆகும். இவற்றிக்கு இருக்கும் ஒரு முக்கிய பண்பு இவற்றால் தன்னைப்போல ஒரு நகலை உருவாக்கி இன்னுமொரு கணனியையும் தாக்கமுடியும். இப்படி இவற்றால் பல்வேறு கணனிகளுக்கு பரவிச்செல்ல முடியும். இப்போது ஏன் இந்தப் ப்ரோக்ராம்களுக்கு வைரஸ் என்று பெயரிட்டார்கள் என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.
♈✝♏கணணி வைரஸ்கள் உருவாகுவதற்கு காரணமாக இருப்பன, கணனித் தொழில்நுட்பத்தில் இருக்கும் ஓட்டைகளே! ஆழமாக ஆராய வேண்டும் என்றால் நீங்கள் நிச்சயம் கணணி அறிவியல் (computer science) அடிப்படையில் இதனை பார்க்க வேண்டும். இங்கு என்னால் முடிந்தவரை இலகுவாக விளக்குகிறேன்.
♈✝♏எனக்கு கணனியின் மறுபக்கத்தை காட்டிய ஆசிரியர் அடிக்கடி சொல்லுவது, அவர் சொன்னதை தமிழுக்கு மொழிபெயர்த்தால் இப்படி வரும், “முறைமை (system) என்று ஒன்று இருக்கும் வரை அதில் ஓட்டை என்று ஒன்று இருந்துகொண்டே இருக்கும்”. அவர் சொல்லவந்தது முற்றுமுழுதாக பூரணப்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் என்று ஒன்றும் கிடையாது அல்லது இதுவரை அப்படி ஒன்றை டிசைன் செய்வது என்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்ற ஒன்றே. இப்படியான ஓட்டைகளே இந்த வைரஸ்கள் இயங்க வழிவகுக்கின்றன.
♈✝♏கணினி வைரஸ்கள் உருவகியதற்கும், இன்னும் உருவாகிக்கொண்டிருப்பதற்கும் பல்வேறு துணைக்காரணங்களை நாம் காணலாம். சுயலாபம் கருதி, அரசியல் காரணங்களுக்காக, போட்டி நிறுவனங்களை வீழ்த்த, மற்றும் ஆண்டி-வைரஸ்களை விற்பனை செய்ய(??!!) இப்படி பல காரணங்கள். சும்மா உள்ளலாயிக்கு வைரஸ் ப்ரோக்ராம்களை உருவாக்குபவர்களும் உண்டு!
♈✝♏சில தீவிரமான வைரஸ்கள், பல்வேறு பட்ட கணணி அறிவியல் ஆராய்ச்சியின் பக்கவிளைவாகவே உருவாகுகின்றன. இப்படியான ஆழமான ஆராய்சிகள், கணணி தொழில்நுட்பத்தில் உள்ள சில ஓட்டைகளை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும். இந்த ஓட்டைகளை கண்டதும் சில புண்ணியவான்களின் மண்டையில் லைட் எறிந்துவிடும். பிறகென்ன வெறும் வாயை மெல்வதற்கு அவல்பொரி மேல் தானே.
*கணணி வைரஸ்களில் பலவகை உண்டு*
♈✝♏நாம் பொதுவாக கணணி வைரஸ்கள் என்று பொதுப்படையாக அழைத்தாலும், வைரஸ்களில் பலவகை உண்டு. அவற்றில் செயல்முறைக்கு ஏற்ப அவற்றை வகைப்படுத்தியுள்ளனர். அப்படிப்பட்ட பொதுவான வகைகளைப் பார்ப்போம்.
♈✝♏ஒன்றைமட்டும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். வடிவேலு சொல்வதைப்போல “நமக்கு தேவையில்லாத இடைஞ்சல் செய்யும் அத்தனை ப்ரொக்ராம்களும் வைரஸ் தான்! ஆங்!!”
*ஒவ்வொரு வகையாக பார்க்கலாம்.*
*வைரஸ்களின் வகைகள்*

*மல்வேர் (Malware)*
♈✝♏கணனியின் செயல்பாட்டை பாதிக்கும் அனைத்து ப்ரோக்ராம்களையும் மல்வேர் என்று அழைக்கலாம். இன்று கணனித் துறையில் பல்வேறு பட்ட தீங்கிழைக்கும் ப்ரோக்ராம்களை மல்வேர் என்று தான் அழைகின்றனர். கணினி வைரசும் மல்வேரில் ஒரு வகைதான் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
♈✝♏மல்வேர்கள் ஒரு சாப்ட்வேர் போலவோ, அல்லது உங்களுக்கே தெரியாமல் மறைந்திருந்து இயங்கும் ஒரு ப்ரோக்ராம் ஆகவும் இருக்கலாம்.
*வைரஸ்கள் (Virus)*
♈✝♏இவை பொதுவாக கணனியில் உள்ள வேறு எதாவது ப்ரோக்ராம்கள் அல்லது கோப்புகளில் ஒட்டிக்கொள்ளும். தனித்து இயங்காத இந்த வைரஸ் ப்ரோக்ராம்கள், இவை ஒட்டிக்கொண்டுள்ள ப்ரோக்ராம்கள் அல்லது கோப்புக்கள் திறக்கப்படும்போது செயல்படத் தொடங்கும்.
♈✝♏இப்படி செயல்படும் போது இவை மேலும் வேறு ப்ரோக்ராம்கள், கோப்புகளில் தன்னையும் இணைத்துக்கொள்ளும், இப்படி வைரஸ் இணைந்துகொண்ட ப்ரோக்ராம்கள், கோப்புக்களை இன்னுமொரு கணனிக்கு எடுத்துச் செல்லும்போது அந்தக் கணணியிலும் உள்ள கோப்புக்களில் மீண்டும் மீண்டும் பதிந்துகொள்ளும்.
♈✝♏இவை கணனிக்கு வந்தபின், அதில் இருக்கும் கோப்புகளை அழிப்பது, செயல்முறைமையின் சில பகுதிகளை செயல்படாமல் தடுப்பது. ஹர்ட்டிஸ்க்களை செயலிழக்க, கணணிகளை அடிக்கடி ரீஸ்டார்ட் செய்வது என்று பல தலையிடிகளை உருவாகலாம்.
♈✝♏இப்படித்தான் நண்பர்களின் கணனியில் உள்ள வைரஸ்கள் பிளாஷ் டிரைவ் மூலமும் ஈமெயில் அட்டச்மெண்ட் மூலமும் உங்கள் கணனிக்கு வந்துசேருகின்றன.
*ட்ரோஜன் ஹோர்ஸ் (Trojan Horse)*
♈✝♏இவ்வகையான ப்ரோக்ராம்கள், ஒழிந்துகொண்டு வேலை செய்வன. அதாவது உணமையிலேயே பயனுள்ள எதாவது சாப்ட்வேர்களில் ஒழிந்துகொண்டு, உங்களுக்கே தெரியாமல் உங்கள் கணனியில் இருக்கும் தகவல்களை களவெடுத்து அவற்றை தேவையான இடத்திற்கு அனுப்பிவிடும். அல்லது தகவல்களை அழிக்கலாம், உங்கள் கணணியை செயலிழக்கவும் செய்யலாம்.
♈✝♏ஆனால் பெரும்பாலும் தகவல்களை பயனருக்கு தெரியாமல் களவாடுவதற்கே இந்த ட்ரோஜன் ஹோர்ஸ்கள் பயன்படுகின்றன. அதேபோல இவை உங்கள் கணணியை ஒரு ஹேக்கர், தொலைநிலை அணுகல் மூலம் (Remote access) கட்டுப்படுத்தக் கூடியதாகவும் மாற்றிவிடுகின்றது.
♈✝♏இவை நம்பகமான, பயனுள்ள சாப்ட்வேர் போல நடிப்பதால், பெரும்பாலான பயனர்கள், குறிப்பாக இணையப் பயனர்கள் ஏமாந்து இதனை தங்கள் கணனியில் நிறுவிவிடுகின்றனர். இவை நல்லபிள்ளைகளைப் போல நடிப்பதால் இவற்றை கண்டறிந்து நிறுவல் நீக்கம் (uninstall) செய்வது கடினம்.
♈✝♏இவ்வளவு வேலைகளை செய்யும் இந்த ட்ரோஜான் ஹோர்ஸ் இல் உள்ள ஒரே ஒரு நன்மை. பொதுவாக இவை ஒரு கணனியில் இருந்து இன்னுமொரு கணனிக்கு சாதாரண வைரஸ்கள் போல பரவுவதில்லை. இப்படி பரவக்கூடாது என்று ஒரு சட்டமும் இல்லை. அப்படி பரவும் சில டோர்ஜன் ஹோர்ஸ்களும் உண்டு.
*ரூட்கிட் (Rootkit)*
♈✝♏இவையும் மறைந்திருந்து செயல்படும் ஒருவகையான ப்ரோக்ராம்கள், ஆனால் ட்ரோஜான் ஹோஸ் போல நன்மை செய்வதுபோல் உள்நுளைவதில்லை. அதுமட்டுமளது இவற்றின் அமைப்பே மிகவும் மறைமுகமானது என்பதால், சாதாரண தேடுதல் நடவடிக்கை மூலம் ரூட்கிட்டை கண்டறிய முடிவதில்லை. சிலவேளைகளில், இல்லை, இல்லை பெரும்பாலும் ஆண்டி-வைரஸ் ப்ரோக்ராம்களால் கூட ரூட்கிட்டை கண்டறிய முடிவதில்லை.
♈✝♏இவை கணனியில் நிறுவப்பட்டுவிட்டால், பின்னர் அந்தக்கணனியின் முழுக்கட்டுப்பாட்டையும் இந்த ரூட்கிட்கள் தன்வசப்படுத்திவிடும். இவை பெரும்பாலும் கணனியில் உள்ள தகவல்களை அதாவது பாஸ்வோர்ட், வங்கி அட்டை இலக்கங்கள், மற்றும் வேறு தகவல்களை, வேறு எந்த முறையிலும் கண்டரியாவண்ணம் தத்துருபமாக திருடக்கூடியன. இவ்வாறு இவை திருடுவது கணனியின் அடிப்படைக்கட்டமைப்பில் நடைபெறுவதால், ஆண்டிவைரஸ் ப்ரோக்ராம்களால் இந்த திருட்டையும் கண்டறிய முடிவதில்லை.
♈✝♏அதேபோல ஒரு இயங்கு முறைமையின் மிக அடிப்படித்தளத்தில் இவை இயங்குவதால், பெரும்பாலும் கண்டறிவதே கடினம் என்னும்போது அதனை அழிப்பது என்பது முடியதகாரியமாகவே இருக்கும். சில விசேட வகையான ரூட்கிட்கள் இயங்கு முறைமையின் கேர்னல் அமைப்பில் இயங்குவதால், இப்படியான ரூட்கிட்களை அளிக்க முதலிருந்து மீண்டும் இயங்கு முறைமையை நிறுவவேண்டிய தேவை ஏற்படலாம்.
♈✝♏ரூட்கிட்களை கண்டறிவதற்கு என்றே சில விசேட வகையான ப்ரோக்ராம்களை சில ஆண்டிவைரஸ் நிறுவனங்கள் தருகின்றன.
வோர்ம் (Worm)
♈✝♏இவை தனித்து இயங்கக்கூடியதும், தன்னைத் தானே பிரதிசெய்து, வலையமைப்பில் இணைந்துள்ள மற்றைய கணணிகளிலும் நிறுவக்கூடியது. இவை பெரும்பாலும் கணனியின் வலையமைப்பில் உள்ள பாதுகாப்புச் செயன்முறைகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தியே தன்னைத் தானே பிரதி செய்து பரவுகின்றன.
♈✝♏இந்த வோர்ம் ப்ரோக்ராம்கள் பெரும்பாலும் கணனியின் வலையமைப்பில் பேரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. சில வோர்ம் ப்ரோக்ராம்கள் கணனியின் செயல்பாட்டை பாதிப்பதாக இருந்தாலும், பெரும்பாலான வோர்ம்கள், வைரசைப் போல கணனியில் உள்ள கோப்புகளையும் ப்ரோக்ராம்களையும் பாதிப்பதில்லை, மாறாக இவை கணனிகள் இணைந்துள்ள வலயமைப்பயே குறிவைகின்றன.
♈✝♏வலையமைப்பைத் தாக்குவதன் மூலம், வலையமைப்பை செயலிழக்க வைப்பதோ, அல்லது வலையமைப்பின் மூலம் இடம்பெறும் தொடர்பாடல்களை ஒட்டுக்கேட்பது மற்றும் மாற்றியமைப்பது போன்ற வேலைகளிலும் இது பயன்படும்.
*ஸ்பைவேர் (Spyware)*
♈✝♏பேர் சொல்ல்வதுபோல உங்கள் கணனியில் இருந்து தகவல்களை திருடுவதே இந்த ப்ரோக்ராம்களின் ஒரே இலக்கு. உங்கள் பாஸ்வோர்ட், உங்கள் வங்கித்தகவல்கள் போன்றவற்றையும் இவை திருடுகின்றன. இவை இப்படியான தகவல்களை மட்டும் திருடுவதில்லை.
♈✝♏நீகள் டைப்செய்வது, பார்க்கும் இணையதளங்களின் முகவரிகள், உங்கள் புகைப்படங்கள் இப்படி நீங்கள் கணனியில் செய்யும் எல்லா வேலைகளையும் இவை திருடக்கூடியன.
♈✝♏சில ப்ரோக்ராம்கள், லேப்டாப் கேமரா, வெப்காம் போன்றவற்றை சுயாதினமாக, உங்களுக்கு தெரியாமல் இயக்கி, அந்த வீடியோக்களையும் திருடுகின்றன! அகவே உசாராக இருப்பது முக்கியம்.
♈✝♏பெரும்பாலும் இவை இணையம் மூலமே உங்கள் கணனிக்கு வருகின்றது. நீங்கள் டவுன்லோட் செய்யும் சாப்ட்வேரில் உள்ள இணைய டூல்பார்கள், மிகச் சிறந்த ஸ்பைவேர்கள்.
♈✝♏ட்ரோஜன் ஹோர்ஸ் உம் ஒருவகையான ஸ்பைவேர் தான்.
♈✝♏ஸ்பைவேர்களை அழிப்பதற்கென்றே ஆண்டிஸ்பைவேர்கள் உண்டு. ஆனால் இப்போது வரும் ஆண்டிவைரஸ்கள் இந்த ஸ்பைவேர்களை கண்டு அழிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளன.
*இன்னும் பல*
♈✝♏மேலே கூறிய வகையான வைரஸ்களை விடவும் மேலும் பலவகையான பயனருக்கும், கணனிக்கும் பங்கம் விளைவிக்கக்கூடிய ப்ரோக்ராம்கள் உண்டு.
♈✝♏கீலோக்கேர், பேக்டோர், அட்வேர், ஸ்கேர்வேர் இப்படி பல பல.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு எல்லையில் வேலை செய்கிறது. இவற்றில் இருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது என்று அடுத்ததாக பார்க்கலாம்.
*ஆண்டிவைரஸ்கள் – தீர்வாகுமா?*
♈✝♏பொதுவாக ஆண்டிவைரஸ்கள் என்றவுடன் நாம் என்ன நினைப்போம்? நிச்சயமாக என்ன நினைப்போமோ அதுவல்ல இது! எனக்கு அடிக்கடி ஏற்படும் பிரச்சினை நண்பர்கள் அல்லது என் வாடிக்கையாளர்கள் எனக்கு போன் செய்து, “என்ன தம்பி ஆண்டிவைரஸ் போட்டிருந்தும் வைரஸ் வந்துவிட்டதே, கம்ப்யூட்டர் அடிக்கடி ரீஸ்டார்ட் ஆகிறது, சேவ் செய்த கோப்பை காணவில்லை, டெஸ்க்டாப் படத்தை காணவில்லை” இப்படி பல பல.
♈✝♏ஆண்டிவைரஸ்களை அவர்களுக்கு நிறுவிக்கொடுக்கும் போதும் நான் சொல்லிக் கொடுத்துவிட்டுதான் வருகிறேன், ஆனால் ஏனோ பெரும்பாலானவர்களுக்கு புரிவதில்லை.
♈✝♏ஆண்டிவைரஸ்கள் என்பன வக்சீன் போல அல்ல. ஒரு தடவை நிறுவிவிட்டால் அதன்பின் மீண்டும் எந்தவொரு வைரசும் வராமல் இருப்பதற்கு. சற்று விளக்கமாக ஆண்டிவைரஸ்கள் எவ்வாறு வேலைசெய்கின்றன என்று பாப்போம். அது உங்களுக்கு ஏன் ஆண்டிவைரஸ்களால் எல்லா வைரஸ்களையும் பிடிக்க முடிவதில்லை என்று விளங்க உதவும்.
♈✝♏வைரஸ்கள் எல்லாமே ப்ரோக்ராம்கள் தானே, ஆனால் ஒவ்வொன்றும் தொழில்படும் முறை வித்தியாசப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட வைரஸ்கள் ஒரே முறையை பயன்படுத்தி தொழிற்படலாம். இந்த முறைகளை அந்த அந்த வைரஸ்களின் ஒப்பம்(signature) என்று வேண்டுமென்றால் கூறலாம்.
♈✝♏ஆண்டிவைரஸ்களுக்கு இப்படி பல்வேறு வகையான ஒப்பங்களை இனம்கானக் கூடியதாக இருக்கும். உங்கள் கணனியில் உள்ள ஒவ்வொரு ப்ரொக்ராம்களும் இயங்கத்தொடங்கும் போது இந்த ஆண்டிவைரஸ்கள் அந்த ப்ரோக்ராம்களை தன்னிடம் உள்ள ஒப்பங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும். இப்படி ஒப்பிடும் போடு இயங்கப்போகும் ப்ரோக்ராமின் ஒப்பம் ஆண்டிவைரஸில் இருக்கும் ஒப்பத்தோடு பொருந்தினால் உங்கள் ஆண்டிவைரஸ், உங்களுக்கு “ஒரு வைரஸ்” அகப்பட்டுவிட்டதாக தகவல் தரும்.
♈✝♏இப்போதுள்ள சில ஆண்டிவைரஸ்கள், இப்படி ஒப்பங்களை மட்டும் சோதிக்காது, கூடவே சில பொதுவான கெட்டபண்புகளையும் சோதிக்கும். அதாவது திருடன் என்றால் திருடுவான், திருட்டு முழி முழிப்பான், போலிசுக்கு மாமூல் கொடுப்பன் என்பதுபோல(??!!) ப்ரோக்ராம்களின் நடத்தைகளையும் இந்த ஆண்டிவைரஸ்கள் சோதிக்கின்றன.
♈✝♏பெரும்பாலான வைரஸ்கள் இந்த வழியில் மாட்டுப்பட்டுவிடும். ஆனால் புதிதாக ஒரு முறையைப் பயன்படுத்தி குறிப்பிட்ட வைரஸ் தொழிற்பட்டால், அதனது தொழில்படும் முறையின் ஒப்பமோ, அல்லது அதன் நடத்தயையோ பற்றிய அறிவற்ற ஆண்டிவைரஸ்களால் இந்த ப்ரோக்ராமை வைரஸ் என்று முத்திரை குத்தி அழிக்கமுடிவதில்லை.
♈✝♏இதனால் தான் ஆண்டிவைரஸ்கள் தினம் தினம், ஏன்? சிலவேளைகளில் மணிக்கொருமுறை கூட தன் ஒப்பங்களை (signatures) புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. இப்படி புதுப்பிப்பதால் புதிதாக களமிறங்கும் வைரஸ்களை அவற்றால் பிடிக்க முடிகிறது. இருந்தும் சில வைரஸ்கள், இந்த ஆண்டிவைரஸ் நிறுவனங்கள் அந்த வைரசின் ஒப்பத்தை கண்டுபிடித்து அதற்கான ஒப்ப முறைமையை தரவேற்ற முதலே, மிகப்பெரிய பதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.
♈✝♏அடுத்தது இணையத்தில் கணணி இணைக்கப்படிருந்தாலே, அக்கணணியில் இருக்கும் ஆண்டிவைரஸ் ப்ரோக்ராமால் புதிய வைரஸ் ஒப்பங்களை தரவிறக்கி சோதிக்க முடியும். ஆக இணையத்தில் அடிக்கடி மேம்படுத்தப்படாத ஆண்டிவைரஸ்கள் பெரும்பாலும் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு பாதுகாப்ப்பை வழங்குவதில்லை.
♈✝♏அதுபோக, சிலவகையான மல்வேர் மற்றும் ரூட்கிட்களை ஆண்டிவைரஸ்களால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை. ஆக அவற்றை இந்த ஆண்டிவைரஸ்களால் கட்டுப் படுத்த முடிவதில்லை.
*இணையத்தை பயன்படுத்துவதில் கவனம் தேவை*
♈✝♏முன்னொரு காலத்தில் பலோப்பி, சீடீ போன்றவற்றில் பரவிய வைரஸ்கள் என்று பெரும்பாலும் இணையம் மூலமே பரவுகின்றன. சில இணையத்தளங்களை நீங்கள் பார்வையிடும் போதே அவை உங்கள் கணணியில் வைரஸ்களை நிறுவி விடுகின்றன.
♈✝♏புதிய இனைய உலாவிகள், அதாவது புதிய கூகிள்குரோம், பயர்பாக்ஸ் போன்றன இதை தடுக்க முயன்றாலும், அடோபி பிளாஷ், மற்றும் ஜாவா போன்ற சொருகிகளில் (plugins) உள்ள குறைபாடுகள் காரணமாக வைரஸ்கள் வருவதை தடுக்க முடிவதில்லை.
♈✝♏மேலும் நீங்கள் தரவிறக்கும் ப்ரோக்ராம்கள், பாடல்கள், கோப்புகள் என்பனவும் வைரஸ்களை கொண்டுவரலாம். கூகிள் என்பது வெறும் தேடல் பொறி மட்டுமே, அதில் வருவது எல்லாமே நல்லதும் உண்மையானதும் என்ற கருத்தை உடனே கைவிடுங்கள். நம்பிக்கயனவர்களிடம் இருந்து மட்டுமே கோப்புக்களை வாங்குங்கள் அல்லது நம்பிக்கையான இணையத்தலத்தில் இருந்து மட்டுமே தரவிறக்குங்கள்.
♈✝♏பெரும்பாலும் காசுகொடுத்து வாங்க வேண்டிய ப்ரோக்ராம்களை இலவசமாக தரவிரக்கியே பெரும்பாலும் நம்மவர் வைரஸ்களிடம் மாட்டிக்கொள்கின்றனர்.
♈✝♏அதேபோல ஆன்லைன் கேம்ஸ் விளாயாடும் இணையத்தளங்கள், பாலியல் சார்ந்த தளங்களும் வைரஸ்களை கணனிக்கு பரப்புவதில் முன்னணியில் இருக்கின்றன.
♈✝♏பார்த்து நடக்கவேண்டியது உங்கள் பொறுப்பு. ஆண்டிவைரஸ்களால் ஒரு எல்லை மட்டுமே பாதுகாக்க முடியும். ஆண்டிவைரசை நிறுவியாச்சு என்று நீங்கள் இணையத்தில் கவனமின்றி உலாவந்தால், பின்விளைவுகளை ஒருவராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதே இந்த தொழில்நுட்ப உலகின் நிதர்சன உண்மை.
அன்புடன் 

ராஜேஷ்.V

பக்கத்து வீட்ல கோழிய கொன்னுட்டாங்க…😔😩

பாவமாயிருந்துச்சு,

அதை தட்டிக் கேக்கலாம்னு போனேன்…😣🏃🏻

ஒரு கிண்ணத்துல குழம்பு குடுத்தாங்க, வாங்கிட்டு வந்துட்டேன்…😝😜😋

தெய்வமே நீ இங்கையா இருக்கே..

ஒரு பிச்சைக்காரன்கோவிலுக்கு முன்பு அமர்ந்து பிச்சை எடுத்துக்

கொண்டு இருந்தான்.

.

அங்கு வரும் மக்கள் ஒரு ரூபாய்

மட்டும் போட்டார்கள்.

.

போதிய வருமானம் இல்லாமல் கடை வீதிக்கு

சென்றான்.

.

அங்குள்ள டாஸ்மாக் முன்பு அமர்ந்து பிச்சை

எடுக்க துவங்கினான்.

.

அங்குள்ள குடிமகன்கள் பத்து

இருபது ரூபாய் தாள்கள் போட்டனர்.

.

மேலும் ஓசியில் குவாட்டரும் கிடைத்தது !

.

போதையில் பிச்சைக்காரன் சொன்னான்

.

“தெய்வமே நீ இங்கையா இருக்கே நா

இவ்வளவுநாளா நீ கோவில்ல இருக்கிறன்னுல்ல

நினைச்சேன்” 😀😀😀

சிவனிடம் வரம் வேண்டாம் என்ற முனிவர்.படித்ததில் பிடித்தது.

முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். 

மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரை கண்டதும் உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து மரத்தடியில் பார்த்தீர்களா? என்றாள்.
“பார்த்தேன்” என்றார் பரமன்.
பார்த்தபிறகு சும்மா எப்படி போவது ஏதேனும்

வரம் கொடுத்துவிட்டுப் போகலாம் வாருங்கள் என்றாள் அம்மை. அட, அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம் செல்வது வீண்வேலை, வேண்டாம் வா! நம் வழியே போகலாம் என சொல்ல, ஆனால் அம்மை பார்வதி விடவில்லை. ஐயனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்து வந்துவிட்டாள்.
வணக்கம், முனிவரே! என

வணங்கினர் அம்மையும் அப்பனும்.
முனிவர் நிமிர்ந்து பார்த்தார். அடடே எம்பெருமானும் பெருமாட்டியுமா வரணும் வரணும்… என்று வரவேற்றவர் தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்தார். அவ்வளவுதான். மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கிவிட்டார்.
சற்றுநேரம் பொறுமையாகக் காத்திருந்துவிட்டு, சரி, நாங்கள் விடை பெறுகிறோம் என்றனர் அம்மையும் அப்பனும். மகிழ்ச்சியாய்ப் போய் வாருங்கள் ‘வணக்கம்’ என்று சொல்லி விட்டு மீண்டும் கிழிசலைத் தைக்க முனைந்தார் முனிவர்.
அம்மை குறிப்புக் காட்ட, அப்பன் பணிவாய்க் கேட்டார். முனிவரே நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்து விட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை. எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள். கொடுக்கிறோம் என சொல்ல,முனிவர் சிரித்தார். 
வரமா! உங்கள் தரிசனமே எனக்குப் போதும் பரமா! வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள் என்று சொல்லி விட்டுப் பணியில் ஆழ்ந்தார்.

அப்பனும் அம்மையும் விடவில்லை. ஏதாவது

வரம் கொடுக்காமல் செல்ல மாட்டோம் என்று பிடிவாதமாய் நிற்க, முனிவர் வேறு வழியின்றி ஒரு வரம் கேட்டார். நான் தைக்கும்போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போக வேண்டும் அது போதும் என்றார்.
இதைக்கேட்ட அம்மையும் அப்பனும் திகைத்தனர். ஏற்கனவே ஊசிக்குப் பின்னால் தான் நூல் போகிறதே. இதற்கு நாங்கள் ஏன் வரம் தர வேண்டும்? என்று அம்மை பணிவாய் கேட்கிறார்.
அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் நடந்துகொண்டு வந்தால் வரவேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால் வருமே. இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தர வேண்டும்? என்று கேட்டார் முனிவர்.
முனிவரின் விளக்கத்தைக் கேட்ட அம்மையும், அப்பனும் சிரித்துவிட்டு சென்றனர்.
‘இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு.
நீதி!

தூய்மையான இறை நம்பிக்கை கொண்டவர் களுக்கு நாம் சரியாக நடந்துகொண்டால் நமக்குரிய விளைவும் சரியாக இருக்கும் என்ற மனத்தெளிவு இக்கதையிலே நமக்கு பிறக்கிறது.